துன்பம் வரும் வேளையிலே சிரியுங்க(சிந்தியுங்கள்)...




நீரின்றி அமையாது உலகு...என்று வள்ளுவர் பெருந்தகை சொல்லிய காலத்தில் இருந்து நீரின் மீது கவனமாக இருந்த தமிழ் சமூகம், இதுவரை தப்பிப்பிழைத்து வந்தது.,ஆனால் இனி அது நடக்காது போலிருக்கிறது.
குடிப்பதற்கும்,விவசாயத்திற்கும் கொஞ்சம் தண்ணீர் திறந்துவிடுங்கள் என்று அண்டை மாநிலத்தை கேட்டால், இப்போதெல்லாம் சண்டைக்குதான் வருகிறார்கள்.

நாமும் நமது நீர் நிலைகளை பிளாட் போட்டு விற்றுவிட்டோம்,மரங்களையெல்லாம் வெட்டி இயற்கையை பாழ்படுத்திவிட்டோம்,ஆற்றில் சாயக்கழிவுதான் ஒடுகிறது மொத்தத்தில் நமது கண்களையே நாமே எவ்வளவு முடியுமோ அவ்வளவு குத்திக்கொண்டுவிட்டோம்.

இப்போது தண்ணீர் இல்லை என்று ஒலமிடுகிறோம்,ஒரு செடியைக்கூட நட நேரமில்லாமல் சும்மா ஒலமிட்டு என்ன செய்வது.
வெறுத்துப் போன தண்ணீராபிமானி தனது செலவில் போஸ்டர் அடித்து கண்ணீர் சிந்தியுள்ளார்

வழக்கம் போல சிரித்துவிட்டு போனாலும் சரி, இல்லை கொஞ்சமாவது சிந்தித்து செயல்பட்டாலும் சரி.-  
 
          -செம்மொழி வலைதளம்
 
 ஏதோ நம்மளால முடிந்த அளவுக்கு மரம் வளர்ப்போம்,வளர்க்க முடியாவிட்டாலும் இருக்கும் மரங்களையாவது வெட்டாமல் பாதுகாப்போம்,  நீரினை வீனாக்காமல் பயன்படுத்துவோம், என ஒவ்வொருவரும் நினைக்கும் பொழுதுதான் நம்பளை நாமே காப்பாற்றிகொள்ளமுடியும். சிந்திப்போம் நன்பர்களே..................


0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More