மரபணு உணவு.... 10 ஆண்டுகளுக்கு தடை!




மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரி, தக்காளி, .... உள்ளிட்ட உணவு பொருட்களின் சாகுபடி குறித்து கள ஆய்வு நம் நாட்டில் நடந்து வருகிறது. இந்த வகையான உணவு பொருட்களால், உடலுக்கு தீங்கு ஏற்படும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குரல் எழுப்பினார்கள். அதன் தொடர்ச்சியாக உச்சநீதிமன்றம், இந்த விவாகரம் பற்றி ஆய்வு செய்ய தொழில்நுட்ப நிபுணர் குழுவை நியமித்தது. தற்போது அந்த குழு
அறிக்கையை அளித்துள்ளது.

‘‘மரபணு உணவு பொருட்களின் கள ஆய்வை நடத்துவதற்கான தற்போதைய நடைமுறையும், மரபும் திருப்த்திகரமாக இல்லை. எனவே, இவற்றை பெரிய அளவில் மாற்றி அமைத்து வலுப்படுத்த வேண்டும். மரபணு உணவு பொருட்கள் குறித்து ஒட்டு மொத்த ஆய்வை நடத்தினோம். அதன் அடிப்படையில்தான், கள ஆய்வு பணியை 10 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளோம்.’’

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More