‘‘பிளாஸ்டிக் அரிசி” சீனர்களின் அடுத்த டூப்ளிகேட்....!


ஆட்ட கடிச்சி மாட்ட கடிச்சி கடைசியில மனுசனயும் கடிக்க போரானுங்க இந்த சீனர்கள், மார்கெட்ல புதுசா ஒரு பொருள் வந்துருச்சுன்னா அது கம்யூட்டரிலயிருந்து கக்கூஸ் கழுவுர ஆசிட் வரைக்கும் டூப்ளிகெட் செஞ்சு விக்கிறதுல சீனாக்காரனுகள அடிச்சிக்க ஆளே இல்லங்கிறது நமக்கு தெரியும். இன்னைக்கு நாம அன்றாடம் பயன் படுத்தும் அரிசியைகூட விடடுவைக்கவில்லை இந்த அறிவு ஜீவிகள், அதுலையும் போலியை கண்டு பிடிச்சு எல்லோரோட உயிருக்கும் ஆப்பு வைக்க காத்துகிட்டு இருக்கானுங்க இந்த பாவிகள்.


கலப்படம் பண்ணுவதே பெரிய தவறாக இருக்கும் போது முழுக்க முழுக்க பிளாஸ்டிக் மற்றும் உருளைக்கிழங்கையே மூலப்பொருட்களாக கொண்டு இந்த அரிசியை சீனாவில் உருவாக்கி மிகவும் மலிவான விலையில் இதை விற்பனைக்கும் வைத்து இருக்கிறார்கள்..! விலை குறைவு காரணமாக வழக்கம் போலவே மக்கள் இந்த அரிசியையே விரும்பி வாங்க..! இந்த அரிசிக்கான தேவையும் அதிகரித்து இருக்கிறது..!

மேலும் மூன்று கப் இந்த அரிசி சாதம் சாப்பிட்டால்.. ரெண்டு முழு பாலிதீன் பைகளை விழுங்கியதற்கு சமமாம்..!
மீண்டும் ஒரு உலக போர்வந்தால் சீனா முக்கிய பங்கு வகிக்கும் என்று கருதிவரும் நிலையில் அவர்கள் எடுத்திருக்கும் ஆயதம் மிகவும் பயங்கரமான ஒன்றாக உணவுக்கான அரிசியிலேயே காட்ட தொடங்கிவிட்டார்கள். 

இதுலவேற நம்ம கவர்மென்டு சில்லரைவர்தகத்தில் அந்நிய முதலீடுன்னுங்கிற பேர்ல எல்லா நாட்டுகாரனுங்களையும் இந்தியாவுக்குள்ள விட்டு கொஞ்சநாளைக்கு நம்ம பொருள வாங்கிட்டு அப்புறம் அவன் நாட்டிலிருந்து அப்புறம் பிளாஸ்டிக் அரிசியைதான் கொண்டு வந்து விப்பான். நம்ப மக்களும் விலை குறைவா இருக்கேன்னு வாங்கிதின்னு சீக்கிறத்தல போய்சேர போறான். 1940 களில் உள்ளமாதிரி அந்நிய பொருளை வாங்கமாட்டோம்ன்னு கோசம் போட்டு இன்னொரு சுதந்திர போராட்டத்த நடத்த வேண்டிய நிலமைக்கு  ஆளாகபோகிறோம். 

இதைகண்டுபிடித்து  செய்தி வெளியிட்டது கொரியாவிலிருந்து வெளியாகும் வீக்லிஹாங்காங் எனும் பத்திரிக்கைதான். அதற்கான லிங்க்
 

ஆங்கிலத்தில் படிக்க லிங்க்

என்ன ஒரு கொடூர மனம் படைத்தவர்களாக இருக்க கூடும் இது போன்ற போலிகளை தயாரிப்பவர்கள்??


இதை மற்றவர்களுக்கும் தெரியபடுத்துங்கள் நன்பர்களே
 

சில்லரை வர்தகத்தில் அந்நியமுதலீடு......?(சிறப்பு பார்வை)




தனக்கு வாக்களித்த மக்களுக்கு நல்ல பாடத்தை கற்பித்துகொண்டிருக்கிறது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கியமுற்போக்குகூட்டனி அரசு. முதலில் டீசல் விலைஉயர்வு ,லிட்டருக்கு 5 ரூ உயர்த்தின பிரச்சனையே இன்னும் முடியலை அதுக்குள்ள சில்லரை வர்த்தகத்தில் அந்நியமுதலீடுன்னு அடுத்த குண்டை தூக்கிபோட்டுட்டார் நம்ம ‘‘மௌனகுரு” ஓ சாரி நம்ம‘‘ மன்மோகன் சிங்”. 'இந்தியாவையே வாழ வைக்கப் போகிறோம்' என்று சொல்லிக் கொண்டு நாற்பது ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட 'பசுமைப் புரட்சி'தான் இன்றைக்கு பசுமை வறட்சிக்கு காரணமாகிவிட்டது. ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் என்று தேவையில்லாத கருமாந்திரங்களை எல்லாம் விவசாயத்தில் கலந்துவிட்டு... இன்றைக்கு மலட்டு விதைகள் வரை கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.

இப்போதே கிட்டத்தட்ட விவசாயிகளுக்கும் விவசாயத்துக்கும் சங்கு ஊதியாகிவிட்டது. இந்த நிலையில், வெளிநாட்டுக்காரன் வந்து விவசாயிகளை வாழ வைக்கப் போகிறானாம்.


உண்மையில் என்ன நடக்கும்?
ஆரம்பத்தில் கூடுதல் விலை தருவது போலவும்... பணத்தை அள்ளி அள்ளி விடுவது போலவும் ஆசை காட்டுவார்கள் ஈமு கோழிகாரன் போல! ஒருகட்டத்தில் உள்ளூர் வியாபாரிகள் எல்லாம் ஒழிந்தபிறகு, 'நான் வைத்ததுதான் சட்டம்... நான் கேட்பது போல் பத்து சென்டி மீட்டர் சுற்றளவு உள்ள கத்திரிக்காய் விளைவிச்சுக் கொடு... 3 அடி நீளமுள்ள முருங்கைக்காயா கொடு... இனிப்பான தண்ணியிருக்கற இளநீரா விளைவிச்சுக் கொடு... வெள்ளைவெளேர்னு மின்னுற அரிசியை கொடு...' என்று கட்டுப்பாடுகளை விதிப்பான் வெள்ளைக்காரன். நம் விவசாயிகள் தடுமாறும்போது... நிலத்தையெல்லாம் கொடுத்துவிட்டு வெளியேறு என்பான்?

   
 பெஸ்ஸி,கோலா போன்ற நிறுவனங்களை  இந்தியாவில கால்ஊனவைச்ச பிறகு என்ன நடந்துச்சு, உதாரனமாக  நம்ம தமிழ் நாட்டுல இருந்த காளிமார்க் சோடா போன்ற குடிசை தொழிலாக  செஞ்சுகிடடுருந்த கம்பெனிகளயே கானோம். இன்னைக்கு ஒரு சில  இடத்துல  கிடைச்சாலும்,  பெஸ்ஸி,கோலா குடுக்கிற பூச்சி மருந்ததானே இந்த மக்கள் வாங்கி குடிக்கிறார்கள். இதே நிலைமைதான் பின்னாளிலும் அமெரிக்கா கத்திரிக்காய் இருக்கா இத்தாலி முருங்கைகாய் இருக்கான்னு  ஒவ்வெரு கடையா கேக்கிற நிலைமையை உண்டுபண்ணபோகிறார்கள் இந்த பெருளாதாரமேதைகள்........!
 

இப்பொழுது நிலக்கரி ஊழலை மறைக்க சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு........?   என்ன கொடுமை இந்தியனே.......

சூரிய சக்தியில இயங்கும் காரை கண்டுபிடித்த தமிழர்


tamil solar car


திருப்பூரைச் சேர்ந்த சிவராஜ்.
உலகச் சந்தையில் தமிழ் மூளைக்கு மதிப்பு அதிகம் என்பதை நிரூபித்து இருக்கிறார் திருப்பூரைச் சேர்ந்த சிவராஜ். எம்.பி.ஏ. பட்டதாரியான இவருக்கு ஆட்டோமொபைல் துறையில் ஆர்வம் அதிகம். தற்போது இவர் கண்டுபிடித்துள்ள, பெட்ரோல் தேவைப்படாத சூரிய சக்தியால் இயங்கும் 'எக்கோ ஃப்ரி கேப்’தான் திருப்பூரின் ஹைலைட். பார்க்க மூன்று சக்கர ரிக்க்ஷாபோல இருந்தாலும் கிட்டத்தட்ட காரின் ரிச் லுக்கோடு இருக்கிறது இந்த ரிக் ஷா. புவி வெப்பமயமாதல் என்கிற அசுரப் பிடியில் சிக்கி இருக்கும் பூமிக்கு இவர் கண்டுபிடித்து இருக்கும் வாகனம் உண்மையில் ஒரு வரப்பிரசாதம். 'இந்தியா புக்ஸ் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ இவருடைய கண்டுபிடிப்பை அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவின் கீழ் அங்கீகரித்து இருப்பது இன்னும் ஒரு சிறப்பு.

''நான் கண்டுபிடித்துள்ள 'எகோ ஃப்ரீ கேப்’ பார்க்க ரிக் ஷாவின் தோற்றத்தில் இருக்கும். இதில் மூன்று பேர் வரை பயணிக்கலாம். சூரிய சக்தி, பேட்டரி, மனித சக்தி மூலம் இது இயங்குகிறது. மனித சக்தி என்றதும் கடின உழைப்பாக இருக்கும் என்று நினைக்க வேண்டாம். சைக்கிளைப் பெடல் செய்வதுபோல் எளிதாகத்தான் இருக்கும். சூரிய ஒளியில் மூன்று மணி நேரம் சார்ஜ் செய்தால், சுமார் 150 கி.மீ. தூரம் வரை இதில் பயணிக்கலாம். மணிக்கு 45 கி.மீ. வேகத்தில் செல்ல முடியும். இந்த வண்டியை வடிவமைத்ததும் இதை முதல்முதலில் தமிழக முன்னாள் கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலாவின் பேத்தியும் உதயநிதி ஸ்டாலினும்தான் டெஸ்ட் டிரைவ் செய்தார்கள். உதயநிதி சார் ஓட்டிப் பார்த்ததும் அசந்துவிட்டார். உடனே 'எனக்கு ஒண்ணு பண்ணிக் கொடுங்கப்பா... பெட்ரோல் போட்டு கட்டுப்படி ஆகலை’னு ஜாலியா கமென்ட் அடித்தார்.

இந்தக் கண்டுபிடிப்பைச் செய்து முடிக்க எனக்கு மூன்று வருடம் உழைப்பு தேவைப்பட்டது. பலமுறை வடிவமைத்தும் திருப்தி ஏற்படவில்லை. ஒன்று, சார்ஜ் ஏறவில்லை. அல்லது சார்ஜ் ஏறினால் அது வண்டியின் ஓட்டத்துக்குப் பயன்படவில்லை. இன்னொரு பக்கம் சரியான வடிவமைப்பு கிடைக்கவில்லை. ஏதாவது ஒரு சிக்கல் இருந்தது. ஆனாலும், விடாமுயற்சியுடன், நான்கைந்து முறை வடிவமைத்த பின்புதான் திட்டம் வெற்றி பெற்றது என்பதால், லட்சக்கணக்கில் பணம் செலவானது. ஆனால், இப்போது சரியான தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துவிட்டேன் என்பதால், எளிதில் வடிவமைத்துவிடுவேன். இது மார்க்கெட்டுக்கு வரும்பட்சத்தில் விலை தோராயமாக ஒரு லட்சம் இருக்கும். ஆனால், பெட்ரோல் செலவு, பராமரிப்புச் செலவு எதுவும் கிடையாது. தினமும் துடைத்து, சுத்தமாகவைத்து இருந்தாலே போதுமானது.

என்னுடைய மூன்று வருட உழைப்புக்கு நல்ல பலன் கிடைத்து இருக்கிறது. எங்கள் தயாரிப்பை விளம்பரப்படுத்த சென்னை, கோவை போன்ற நகரங்களில் சில வண்டிகளை மட்டும் மக்கள் சேவைக்காக டிரைவர்களை நியமித்து இயக்க இருக்கிறோம். இதற்காக வட்டாரப் போக்குவரத்துத் துறையினரிடம் பேசிவருகிறேன். இந்தக் கண்டுபிடிப்பை இணையத்திலும் வெளியிட்டு இருந்தேன். அதைப் பார்த்துவிட்டு, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து நிறையப் பேர் தொடர்புகொண்டார்கள். பெட்ரோல் விலை உயர்வு என்பதைத் தாண்டி எரிபொருள் பயன்பாட்டால் பூமி வெப்பமயமாதலைக் குறைப்பதில் இந்த வாகனம் முக்கியப் பங்கு வகிக்கும் என்று பாராட்டினார்கள். விரைவில் அரசின் அங்கீகாரம் பெற்று இந்த வாகனத்தை விற்பனைக்கு விட இருக்கிறேன்'' என்கிறார் உற்சாகத்துடன்.

இவருடைய இன்னொரு ஐடியா பெங்களூரில் இப்போது செம ஹிட். பெங்களூரு, சென்னை போன்ற பெரு நகரங்களில் பிரமாண்டமான விளம்பரப் பலகைகள் வைக்கத் தடைவிதிக்கப்பட்டு உள்ளது. அதனால், பெங்களூரில் இவருடைய வெப் சைட்டான ‘www.earnwhileyoudrive.in’-ல் கார் உரிமையாளர்கள் பதிவு செய்தால் போதும். அந்த காரின் நான்கு கதவுகளிலும் பிரபல வணிக நிறுவனங்களின் விளம்பரங்களை அழகான படங்களாக வைத்துக் கொள்ளலாம். இந்த விளம்பரங்களும் 'எகோ ஃப்ரி பெயின்ட்டிங்'கில் செய்யப்படுவதால் காரின் கதவுகளுக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை. கார் உரிமையாளர் விரும்பும்போது விளம்பரத்தை காரின் கதவுகளுக்குப் பாதிப்பு இல்லாமல் அகற்றிக் கொள்ளலாம். காரின் உரிமையாளருக்கு மாதம் தோறும் குறிப்பிட்ட தொகை வாடகையும் கிடைக்கிறது. பெங்களூரில் இவருடைய கான்செப்டைப் பின்பற்றி பஸ்களும் நிறைய ஓடுகின்றனவாம்.

யப்பா... சீக்கிரமா இங்கேயும் இந்த கான்செப்டைக்கொண்டு வாங்கப்பா. நிறையப் பேர் கார் தவணைத் தொகை கட்ட முடியாம கஷ்டப்படுறாங்க!



 நன்றி ; தமிழ் பேஸ்புக்

வரலாற்றில் நீங்காத மிகப்பெரிய ”சாத்தம் மில்”



ன்னடா, ஒரு மில்லபற்றி எழுதுரானே , நாம பாக்காத மில்லா எத்தனை ரைஸ்மில்ல பாத்திருப்போம் எத்தனை மாவு மில்ல பாத்திருப்போம் எத்தனை மர மில்ல பாத்திருப்போம்ன்னு நீங்க நினைக்கலாம், உங்களில் சிலர் கேள்விபட்டிருக்கலாம் சிலருக்கு தெரியாமகூட இருக்கலாம் தெரிஞ்சவங்களுக்கு சரி ஆனால் தெரியாதவங்களுக்காகதான் இந்த பதிவை எழுதுகிறேன் நண்பர்களே,


                   “சாத்தம் அறுவை மில்”  இது வரலாற்றின் மிகப்பெரிய நினைவுகளை சுமந்து  கொண்டிருக்கிறது, பன்டைய காலத்தில் எ ங்கு செல்வங்கள் கொட்டிகிடக்கு அதை எப்படி நம்நாட்டுக்கு கொண்டுபோகலாம் என்று திரிந்த ஆங்கிலேயர்கள் இந்தியாவை அடிமைபடுத்திய பிறகு இங்குள்ள இயற்கைவளங்களை கொள்ளையடிக்கும் விதமாக அந்தமான்-நிகோபார் தீவுகளில் உள்ள மிக உயர்ந்த மற்றும் விலை மதிக்கமுடியாத அரிய மரங்களான “பாடாக் ”  இதை “அந்தமான் படாக்” என்றே கூறுவார்கள் அந்த அரிய மரங்களை  தங்கள் நாட்டின் கட்டிட வேலைகளுக்கு பயன்படுத்த திட்டமிட்ட அவர்கள் அந்த மரங்களை வெட்டி   தங்கள் நாட்டிற்கு கொண்டு சென்றனர். முழு மரமாக கொண்டு செல்வதில் மிகவும் சிறமம் ஏற்படவே , மரங்களை அறுத்து கொண்டு செல்ல தீர்மானித்து, போர்ட் பிளேயரிலிருந்து சுமார் 5 கி.மீ துரத்தில் உள்ள சாத்தம் எனும் தீவில் மிக பிரம்மாண்டமாக, அத்தீவின் பரப்பளவில் 40% அளவுக்கு மிகப்பெரிய அறுவைமில்லை 1888 ம் ஆண்டு  கட்டி அதிலிருந்து இந்த மரங்களை அறுத்து தங்கள் நாட்டிற்கு கொண்டு சென்றதோடு மட்டுமல்லாமல் அதை மேற்கத்திய நாடுகளுக்கும்  ஏற்றுமதி செய்து விற்பனை செய்தனர். அந்தமான்-நிகோபார் தீவுகளில் அறுக்கபட்ட படாக் மரத்தினால் அமைக்கபட்ட மரச்சுவர்கள்தான் இன்றளவும் இங்கிலாந்தின் பக்கிங்காம் அரன்மனையில் உள்ளன என்பதும் குறிப்பிடதகுந்த விஷயம்.



இரண்டாம் உலகப் போரின்போது, அதாவது, 1942-ம் ஆண்டு மார்ச் மாதம் 10-ம் தேதி இந்த மர அறுவை ஆலையின் மீது ஜப்பானியர்கள் சரமாரி குண்டு மழை பொழிந்தனர். ஆலையில் பணியாற்றிய தொழிலாளர்கள் பலர் கருகி இறந்ததோடு... கடல் கொந்தளித்து வெளிக்கிளம்பி, பாறைகளும் வெடித்துச் சிதறியிருக்கின்றன. இதனால் முற்றிலும் முடங்கிப்போன ஆலை, ஜப்பானியர்களிடம் இருந்து அந்தமான் மீட்கப்பட்ட 1946-ம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டது. ஆம் அன்று பழமையான இயந்திரங்களை கொண்டு இயங்கிய இந்த ஆலை இன்று அதிநவீன இயந்திரங்களுடன் இயங்கிவருகிறது. தற்போதைய சூழலில் மரங்களை வெட்டுகிறார்களே என நினைக்கவேண்டாம் எவ்வளவு மரங்களை வெட்டுகிறார்களோ அதைவிட கூடுதலாக மூன்று மடங்கு மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனர். மேலும் ஆசியாவிலே மிகப்பெரிய மரம் அறுக்கும் ஆலை இதுதான் என்பதும் குறிப்பிடதகுந்த விஷயம்.

              நன்றி மீண்டும் சந்திப்போம்- S.ராஜ்குமார்

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More