மனைவிக்காக மலையைக் குடைந்த மா மனிதர்!

மறக்கப்படும்..!
மலையைக் குடைந்த மா மனிதர்!

இது ஒருபேரரசன் தன் காதலுக்காக 20000 ஆட்களை அமர்த்தி 22 ஆண்டுகள் கட்டி எழுப்பி, இன்று ஆயிரக்கணக்கான உலக மக்கள் அதிசயிக்கும் தாஜ்மகால் அல்ல. ஒரு விவசாயக் கூலி தனியொரு மனிதனாய் 22 ஆண்டுகள் உழைத்து 60 கிராம மக்களின் வாழ்க்கயை எளிமையாக்க வடித்த காதல் சின்னம்.

பீகாரில் கயா மாவட்டத்தின் கெலார் என்ற கிராமத்தைச் சேர்ந்த தசரத் மான்ஜி ஒரு நிலமில்லாத விவசாய கூலி. அன்பு மனைவி பாகுனி தேவி வீட்டிற்கு அருகில் மலையின் மறுபுறம் குடிக்கத் தண்ணீர் கொண்டு வரும்போது விழுந்து அடிபட்டார். சிறிது நாட்களில் சுகவீனப்பட மலையைச் சுற்றிக் கொண்டு மருத்துவமனைக்குக் கூட்டிச் சேர்க்குமுன்பே மனைவி இறந்துபோனாள். இந்த மலையின் குறுக்கே ஒரு பாதை இருந்திருந்தால் தன் மனைவி இறந்துபோயிருக்கமாட்டாள் என்று உறுதியாக நம்பினார் தசரத் . கெலார் கிராமத்திலிருந்து வஜீரகஞ் என்ற ஊர் எண்பது கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. அங்குதான் இவர்களுக்கான மருத்துவ மனை இருந்தது. வஜீரகஞ்க்கு செல்ல மலையை குடைந்து 13 கி.மீ.தொலைவில் பாதை அமைக்க முடியும்.
ஆனால் யாரும் அதை செய்ய முன்வரவில்லை.30 அடி அகலம், 360 அடி நீளத்திற்கு ஒரு பாதையை உருவாக்கும் பணியை 1959 ஆண்டு மேற்கொண்டார் தசரத். மக்கள் இவரை பைத்தியகாரனாக பார்த்தார்கள், சேர்ந்து உழைக்க யாரும் வரவில்லை. ஆனாலும் விடாமுயற்சியால் பாதை அமைக்கும் பணியை 1981 ம் ஆண்டு முடித்தார். 60 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இன்று 13 கிலோ
மீட்டரில் நகரத்தை அடைகிறார்கள். அன்றாடம் 8 கி.மீ தூரம் பள்ளிக்கு நடந்த அக்கிராமத்தின் குழந்தைகள் 3 கிலோ மீட்டரில்
இன்று பள்ளியை அடைகிறார்கள். வாழ்ந்த காலம் வரை அந்த மாமனிதனின் உழைப்புக்கு மரியாதை கிடைக்கவில்லை. 18 ஆகஸ்ட் 2007 அன்று இறந்த அவருடைய உடலை மட்டும் மரியாதையுடன் அடக்கம் செய்தத அரசு

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More