பிளாஸ்டிக் பைகள் அணு குண்டுகளை போல் ஆபத்தானது :உச்ச நீதிமன்றம் அதிரடி

உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான் தாக்கல் செய்த பொது நல மனுவை விசாரித்த நீதிபதிகள்,எதிர்காலத்தில் அணு குண்டுகள் ஏற்படுத்தும் அழிவை விட,
பிளாஸ்டிக் பைகள் ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளின் அடிப்பகுதியில் அடைத்துக் கொண்டு பாதிப்பை ஏற்படுத்தும்,இதனை இப்படியே விட்டு விட்டால் எதிர்கால சந்ததியினரையும் கடுமையான பாதிப்புக்குள்ளாக்கும்  என்றும், அழிவு மிகப் பயங்கரமானதாக இருக்கும் என்று  கூறியுள்ளனர்.



            இந்தியாவில் உடனடியாக பிளாஸ்டிக் பைகளுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட வேண்டும். இல்லையென்றால் இந்த நிலையை கட்டுப்படுத்த முடியாது என்று கூறியுள்ள உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, எஸ்.ஜே. முகோபாத்யாய், இது குறித்து பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டுள்ளனர்.
                                           வழக்கறிஞரின் பொது நலன் மனுவில், நாட்டில் பிளாஸ்டிக் பைகள் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான மாடுகளின் வயிற்றை அறுவை சிகிச்சை செய்து 30 முதல் 50 கிலோ பிளாஸ்டிக் பைகள் எடுக்கப்படுவதாக கால்நடை மருத்துவமனை அறுவை சிகிச்சை குறித்த புள்ளி விவரம் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
       எனவே பொது மக்களாகிய   நாமும் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து  தூய்மையான இந்தியாவை உருவாக்க உறுதுனையாக இருப்போம்.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More